போலிச் சாமியார்களுக்கு எதிரான போர்.........................................
நாட்டில் உள்ள போலி சாமியார்கள், ஜோதிடர்கள் திடீர் திடீரென்று காணாமல் போகிறார்கள். அவர்களை கடத்தி காட்டில் கொண்டு வைக்கிறார்கள். கடத்தப்பட்டவர்களையும், கடத்தியவர்களையும் தேடுகிறது போலீஸ். கடத்தப்பட்ட போலிகளை, போலீஸே போட்டுத் தள்ளுகிறது. கடத்தப்படும் போலி சாமியார்கள், ஜோதிடர்கள் செய்த அட்டூழியம் என்ன? கடத்தியவர்கள் யார்?. கடத்தப் பட்டவர்களை போலீஸே சுட்டுக்கொல்வது ஏன் என்பதற்கான விடைதான் படம். பாட்டியுடன் வறுமையில் வசிக்கும் ராஜா, தன் நண்பருடன் இணைந்து தொழில் செய்ய நினைக்கிறார். ஜோதிடர் உள்ளே புகுந்து, ‘சேர்ந்து தொழில்செய்தால் நாசம்தான்’ என்று கூற, மனசு தாங்காமல் ராஜா தற்கொலை செய்கிறான். ஒரே பேரனை இழந்த பாட்டி பைத்தியமாகிறாள்.
பாட்டி, பேரனுக்குமான அன்பை யதார்த்தமாகச் சொல்லும் இந்த எபிசோட் அற்புதம். திருமண தோஷம் கழிக்க செல்லும் ஹீரோயினை சாமியார் பாலியல் பலாத்காரம் செய்ய முயல, அந்த முயற்சியில் ஹீரோயின் பலியாவது நெகிழ்ச்சி. தனக்கு சக்தி வேண்டும் என்பதற்காக கள்ளம் கபடமற்ற சிறுவனை நரபலிகொடுப்பது பயங்கரம். இப்படி நாம் அன்றாடம் பத்திரிகையில் படிக்கும் செய்திகள் காட்சிகளாக விரியும்போது போலி சாமியார்களுக்கு எதிராக படத்தில் வரும் வசனங்களும், காட்சிகளும் நம்மை அறியாமலேயே கைதட்ட வைக்கிறது.
உள்ளுர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கேரக்டருக்கு அலெக்சாண்டர் கச்சிதமாகப் பொருந்துகிறார். அவரை துரத்தி துரத்தி காதலிக்கும் பவினாவும் அப்படியே கிராமத்து பெண்ணாக வலம் வருகிறார். பெரிய ஏரியின் நடுவில் இருக்கும் குட்டித் தீவில் அவர்கள் வளர்க்கும் காதல் அழகான நாட்டுப்புற பாட்டு. போலி சாமியார்களுக்கு எதிராக போராடும் சிறுசுகளின் கண்களில் அப்படி ஒரு கோபம், வசனத்தில் அப்படி ஒரு நெருப்பு. பிற்பகுதியில் சீனுக்கு சீன் கைதட்டலை அள்ளிப்போகிறார்கள். கவுரவ தோற்றத்தில் ஒரு பாடலுக்கு நடித்து படத்துக்கு ஸ்டார் வேல்யூ கொடுத்திருக்கிறார் சத்யராஜ். பரணியின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். ராகுவின் கேமரா கிராமத்து அழகை அள்ளி தந்திருக்கிறது. கடல்போன்ற ஏரி, படகு பயணம், நான்குபுறமும் மலைகள் என சினிமா கேமரா கண் வைக்காத இடத்தில் படம்பிடித்து தமிழ்நாட்டில் இப்படியும் ஓர் இடமா என்று ஆச்சர்யப்படுத்துகிறார்கள்.
நல்ல நோக்கம், நல்ல இயக்கம், நறுக் வசனங்களால் கவனம் ஈர்க்கிறார் புதுமுக இயக்குனர். மெகா கடத்தல்களை சிறுவர்கள் செய்வதிலும், அதை கண்டுபிடிக்க, ஒரேயொரு சப் இன்ஸ்பெக்டர் மட்டுமே பயன்படுத்தப்படுவதிலும் லாஜிக் இல்லை. மற்றபடி போலி சாமியார்களுக்கும், ஜோதிடர்களுக்கும் காயம் ஏற்படும் அளவுக்கு சவுக்கடி கொடுக்கிறது வெங்காயம்.
- தினகரன் விமர்சனக்குழு.
நாட்டில் உள்ள போலி சாமியார்கள், ஜோதிடர்கள் திடீர் திடீரென்று காணாமல் போகிறார்கள். அவர்களை கடத்தி காட்டில் கொண்டு வைக்கிறார்கள். கடத்தப்பட்டவர்களையும், கடத்தியவர்களையும் தேடுகிறது போலீஸ். கடத்தப்பட்ட போலிகளை, போலீஸே போட்டுத் தள்ளுகிறது. கடத்தப்படும் போலி சாமியார்கள், ஜோதிடர்கள் செய்த அட்டூழியம் என்ன? கடத்தியவர்கள் யார்?. கடத்தப் பட்டவர்களை போலீஸே சுட்டுக்கொல்வது ஏன் என்பதற்கான விடைதான் படம். பாட்டியுடன் வறுமையில் வசிக்கும் ராஜா, தன் நண்பருடன் இணைந்து தொழில் செய்ய நினைக்கிறார். ஜோதிடர் உள்ளே புகுந்து, ‘சேர்ந்து தொழில்செய்தால் நாசம்தான்’ என்று கூற, மனசு தாங்காமல் ராஜா தற்கொலை செய்கிறான். ஒரே பேரனை இழந்த பாட்டி பைத்தியமாகிறாள்.
பாட்டி, பேரனுக்குமான அன்பை யதார்த்தமாகச் சொல்லும் இந்த எபிசோட் அற்புதம். திருமண தோஷம் கழிக்க செல்லும் ஹீரோயினை சாமியார் பாலியல் பலாத்காரம் செய்ய முயல, அந்த முயற்சியில் ஹீரோயின் பலியாவது நெகிழ்ச்சி. தனக்கு சக்தி வேண்டும் என்பதற்காக கள்ளம் கபடமற்ற சிறுவனை நரபலிகொடுப்பது பயங்கரம். இப்படி நாம் அன்றாடம் பத்திரிகையில் படிக்கும் செய்திகள் காட்சிகளாக விரியும்போது போலி சாமியார்களுக்கு எதிராக படத்தில் வரும் வசனங்களும், காட்சிகளும் நம்மை அறியாமலேயே கைதட்ட வைக்கிறது.
உள்ளுர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கேரக்டருக்கு அலெக்சாண்டர் கச்சிதமாகப் பொருந்துகிறார். அவரை துரத்தி துரத்தி காதலிக்கும் பவினாவும் அப்படியே கிராமத்து பெண்ணாக வலம் வருகிறார். பெரிய ஏரியின் நடுவில் இருக்கும் குட்டித் தீவில் அவர்கள் வளர்க்கும் காதல் அழகான நாட்டுப்புற பாட்டு. போலி சாமியார்களுக்கு எதிராக போராடும் சிறுசுகளின் கண்களில் அப்படி ஒரு கோபம், வசனத்தில் அப்படி ஒரு நெருப்பு. பிற்பகுதியில் சீனுக்கு சீன் கைதட்டலை அள்ளிப்போகிறார்கள். கவுரவ தோற்றத்தில் ஒரு பாடலுக்கு நடித்து படத்துக்கு ஸ்டார் வேல்யூ கொடுத்திருக்கிறார் சத்யராஜ். பரணியின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். ராகுவின் கேமரா கிராமத்து அழகை அள்ளி தந்திருக்கிறது. கடல்போன்ற ஏரி, படகு பயணம், நான்குபுறமும் மலைகள் என சினிமா கேமரா கண் வைக்காத இடத்தில் படம்பிடித்து தமிழ்நாட்டில் இப்படியும் ஓர் இடமா என்று ஆச்சர்யப்படுத்துகிறார்கள்.
நல்ல நோக்கம், நல்ல இயக்கம், நறுக் வசனங்களால் கவனம் ஈர்க்கிறார் புதுமுக இயக்குனர். மெகா கடத்தல்களை சிறுவர்கள் செய்வதிலும், அதை கண்டுபிடிக்க, ஒரேயொரு சப் இன்ஸ்பெக்டர் மட்டுமே பயன்படுத்தப்படுவதிலும் லாஜிக் இல்லை. மற்றபடி போலி சாமியார்களுக்கும், ஜோதிடர்களுக்கும் காயம் ஏற்படும் அளவுக்கு சவுக்கடி கொடுக்கிறது வெங்காயம்.
- தினகரன் விமர்சனக்குழு.
No comments:
Post a Comment