Pages

Saturday, December 10, 2011

மாலைமலர்



                            
                                                                 வெங்காயம்
                                                                          சனிக்கிழமை, ஆகஸ்ட் 27, 4:54 PM IST

                      
ஜோதிட போலிகளை தோலுரிக்கும் கதை....

கிராமங்களில் ஜோதிடர்கள், சாமியார்கள் திடீர் திடீரென காணாமல் போகிறார்கள். அவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியாமல் நாடே அல்லோலப்படுகிறது. சாமியார்களை கண்டு பிடிக்கும் பொறுப்பை போலீஸ் அதிகாரி அலெக்சாண்டரிடம் மேலிடம் ஒப்படைக்கிறது.

அவர் சல்லடை போட்டு தேடி கடத்தல்காரர்களை கண்டுபிடிக்கிறார். பிறகு பிளாஷ்பேக்....

இரு நண்பர்கள் சேர்ந்து தொழில் துவங்க முயற்சித்து ஜோதிடரை அணுகுகின்றனர். அவர் ஒருவனுக்கு தவறான பலன் சொல்லி நண்பர்களை பிரிக்கிறார். கெட்ட பலன் சொல்லப்பட்ட நண்பன் விரக்தியில் தற்கொலை செய்கிறான். அவன் பாட்டி ஆதரவின்றி பைத்தியம் ஆகிறாள்.

தெருகூத்து கலைஞர் நோய்வாய்ப்பட்ட மகனுக்கு சிகிச்சை அளிக்க ஆஸ்பத்திரிக்கு போகிறார். அங்கு நரபலி கும்பலிடம் சிறுவன் அகப்பட்டு சாகிறான். திருமணம் ஆகாத பெண்களுக்கு தோஷம் கழிக்கும் சாமியாரின் காமவேட்டையில் சிக்கி இளம் பெண் பலியாகிறாள்.

பாதிக்கப்பட்டவர்கள் கடத்தலுக்கு பின் மாயமாய் இருப்பது கண்டறியப்படுகிறது. ஜோதிடர்கள் மீட்கப்பட்டார்களா? என்பது கிளைமாக்ஸ்...

அழுத்தமான கதை உயிரோட்டமான கதாபாத்திரங்களில் காட்சிகளை நகர்த்தி மனதை பிழிந்தெடுக்கிறார் இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார். பேரனுக்காக வேலைக்கு போகும் பாட்டியும், தன்னால் அவள் உயிருக்கு பாதிப்பு வரும் என்று ஜோதிடர் சொன்ன தவிப்பில் உயிரை மாய்க்கும் பேரனும் நெஞ்சை ரணமாக்குகின்றனர்.

மகனுக்கு நோய் பார்க்க ஆஸ்பத்திரி போய் அவனை நரபலிக்கு காவு கொடுத்து கதறும் அந்த தெருக்கூத்து கலைஞர் கண்களை குளமாக்குகிறார். அலெக்சாண்டர்- பவினா காதல் கிராமிய கவிதை...

சத்யராஜ் ஒரு பாடலுக்கு தலைகாட்டி நிமிர வைக்கிறார். பரணி இசையில் பாடல்கள் இனிமை நேர்த்தியும் வீரியமும் நிறைந்த கதை...

கிளைமாக்சில் சிறுவர்கள் மேதாவித்தனமாக பேசுவது யதார்த்தத்தில் ஒன்றவில்லை.

No comments:

Post a Comment