Pages

Saturday, December 10, 2011

தினமணி


                                                                                                                                                                                

                                                    

                                                                     First Published : 22 Aug 2011 12:00:00 AM IST

மூகத்தில் மூடப் பழக்க வழக்கங்களைப் பரப்பி அவற்றின் மூலம் ஆதாயம் அடைந்து வரும் சுயநலவாதிகளின் உண்மை சொரூபத்தைத் தோலுரித்துக் காட்டியுள்ள நல்ல படம்.
ஒரு கிராமத்தில் திடீர் திடீரென சாமியார்களும் ஜோதிடர்களும் காணாமல் போகிறார்கள்.
காவல்துறை விசாரணையை முடுக்கிவிடுகிறது. கடத்தப்பட்டவர்கள் மீட்கப்படுகிறார்களா? கடத்தியது யார்? ஏன் கடத்தினார்கள்? என்பதை விறுவிறுப்பாக சொல்வதுதான் படம். இந்தக் கதையோட்டத்தில் ஒரு காதல் ஜோடியின் ரசிக்கத்தக்க குறும்புகளை இணைத்து படத்துக்கு சுவாரஸ்யம் கூட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் சங்ககிரி ராச்குமார்.
போலி சாமியார்களும், பரிகாரம் என்ற பெயரில் பணம் பறிக்கும் ஜோதிடர்களும் அப்பாவி மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி எப்படி ஏமாற்றுகிறார்கள் என்பதை நெகிழ்ச்சியான காட்சிகள், நேர்த்தியான திரைக்கதை, சிரிக்கவும் சிந்திக்கவும் தூண்டும் இயல்பான நகைச்சுவை வசனங்கள் ஆகியவற்றின் மூலம் யதார்த்தமாகச் சித்திரித்திருக்கிறார் இயக்குநர்.
கதைக்குப் பொருத்தமான முகங்களைத் தேர்ந்தெடுத்து கதாபாத்திரங்களுக்கு வலு சேர்த்திருப்பதால் அறிமுக நடிகர்களின் நடிப்பை ரசிக்க முடிகிறது. குறிப்பாக,
ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் இடம்பெறும் நாடகக் கலைஞரின் வறுமைச் சூழல், பிள்ளைப் பாசம், மகனின் மருத்துவச் செலவுக்காக மருத்துவமனைக்கு எதிரே கூத்துக்கட்டும் காட்சிகள் மனதை நெகிழச் செய்கின்றன.
நாடகக் கலைஞராக நடித்துள்ள எஸ்.எம்.மாணிக்கம் (இயக்குநரின் தந்தை) தமிழ் சினிமாவில் ஜொலிக்க வாய்ப்புள்ளது. இயக்குநர் ராச்குமாரும் படத்தில் நடித்திருக்கிறார். அவருடைய சேலத்து தமிழ் உச்சரிப்பும் யதார்த்தமான நடிப்பும் அவரை ஒரு தேர்ந்த நடிகராக அடையாளம் காட்டியுள்ளன.
நாயகன் அலெக்சாண்டர், நாயகி பவீனா, பூ விற்கும் சிறுமி, சைக்கிள் கடைச் சிறுவன், டீ கடை சிறுவன், மனநலம் பாதித்த மூதாட்டி உள்ளிட்ட பலருடைய பங்களிப்பும் படத்தில் குறிப்பிடத்தக்கது.
கெüரவ வேடத்தில் வரும் நடிகர் சத்யராஜின் பேச்சில் பகுத்தறிவுச் சிந்தனை பட்டொளி வீசி பறக்கிறது. பரணியின் இசையில் "அச்சமென்ன அச்சமென்ன ஆசைத் தமிழே...', "அரைக்கிறுக்கன் அரைக்கிறுக்கன் அடியே...' பாடல்கள் ஹிட் ரகம். பின்னணி இசையில் மிரட்டல்.
படத்தில் ஆங்காங்கே இடம்பெறும் சில "லாஜிக்' மீறல்கள், க்ளைமாக்ஸ் காட்சியில் வயதுக்கு மீறிய அனுபவத்துடன் சிறுவர்கள் பேசும் பகுத்தறிவு வசனங்கள் போன்றவற்றை படத்தின் சில குறைபாடுகளாகக் குறிப்பிடலாம் என்றாலும் அவற்றையும்கூட கண்ணில் தெறித்த பன்னீர்துளிகளாகக் கருதி படக்குழுவினரைக் கைகுலுக்கலாம்.
முதல் படத்திலேயே இது போன்ற ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து நல்ல கருத்துகள் மூலம் ரசிகர்களிடம் விழிப்புணர்ச்சியை விதைக்க முற்பட்டுள்ள இயக்குநர் ராச்குமார் பாராட்டுக்குரியவர்.
சிறிய பட்ஜெட்டில் தரமாகவும் நிறைவாகவும் உருவாக்கப்பட்டுள்ள இது போன்ற படங்களுக்கு போதிய விளம்பர வெளிச்சம் கிடைத்து, மக்களைச் சென்றடைந்தால்தான் தமிழ் சினிமாவில் சிறு முதலீட்டுப் படங்களின் வரவு அதிகரிக்கும்.
"வெங்காயம்' - புதிய முயற்சிக்கு ஜெயம்!

1 comment:

  1. Hello Sir.. This is Alice Angel, PhD research scholar in the Dept of Media Sciences, Anna University, Chennai.. My research is about communication strategies used for eradicating superstition from Tamil Nadu. I have watched your film 'vengaayam' before two years as a review of my literature.. Now i need an interview with you on movies role on superstition eradication.. Will you help me sir? Expecting a favourable reply.. Thank You..

    ReplyDelete